/* */

200 படுக்கையுடன் கூடிய சித்தா கொரோனா புத்துணர்வு மையம் அமைச்சர் திறப்பு

திருச்சியில் 200 படுக்கைகளுடன் கூடிய சித்தா கொரோனா புத்துணர்வு மையம்.அமைச்சர் கே.என்,நேரு திறந்துவைததார்

HIGHLIGHTS

200 படுக்கையுடன் கூடிய சித்தா கொரோனா  புத்துணர்வு மையம்  அமைச்சர் திறப்பு
X

திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட சித்தா கரோனா புத்துணர்வு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என். நேரு இந்த மையத்தை இன்று திறந்து வைத்தார். இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்திலேயே முதன் முறையாக 200 படுக்கைகள் கொண்ட சித்தா புத்துணர்வு மையம் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெறலாம்.

கரோனா தொற்று வந்த பிறகும், வருவதற்கு முன்பு தடுக்கவும் இங்கு மருந்துகள் வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இங்கு சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். ஆக்சிஜன் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் நவீன மருத்துவத்திற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள் என்றார்.

Updated On: 16 May 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!