/* */

கேட்பாரற்று கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்

திருச்சியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர்கள் ரயில்வே போலீசாரிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

கேட்பாரற்று கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்
X

ஆட்டோ டிரைவர்கள் கண்டெடுத்த பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று கேட்பாரற்று கிடந்த ஒரு பையை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் ரூ. 6 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்களான நடராஜ், முகமது காசிம் ஆகியோர் திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் கேட்பாரற்று கீழே கிடந்து எடுத்த பணத்தை ஒப்படைத்தனர்.

மேலும் பணத்துடன் கிடந்த அந்த பையில் இருந்த தகவலின் அடிப்படையில் உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி உரிய நபர்களிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர்களின் நேர்மையை ரயில்வே போலீசார் பாராட்டினர்.

Updated On: 5 Jan 2022 12:22 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  2. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு