Begin typing your search above and press return to search.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜகருப்பன் (வயது 59) என்பவர் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.