/* */

திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சிக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் (பைல் படம்)

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்தரெயில் திருச்சி ரெயில் நிலையத்தில் வந்து நின்றபோது,ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பெட்டியின் கழிவறைக்கு அருகே 2 சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டனர். இதுகுறித்து பயணிகளிடம் விசாரித்தபோது, அந்த சாக்கு மூட்டைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. உடனே அவற்றை ரெயிலில் இருந்து கீழே இறக்கி சோதனை நடத்தினார்கள். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.அதன்மதிப்பு ரூ.88 ஆயிரம் இருக்கும்.

ரெயிலில்புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது உடனடியாகதெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 8 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....