/* */

கொரோனா தொற்றுடன் வந்த பயணி சிறப்பு வார்டில் அனுமதி

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கொரோனா தொற்றுடன் வந்த விமான பயணி அரசு மருத்துவ மனையில் உள்ள ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதி

HIGHLIGHTS

கொரோனா தொற்றுடன் வந்த பயணி சிறப்பு வார்டில் அனுமதி
X

தற்போது, உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் 101 பயணிகளுடன் வந்தது.

பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, மயிலாடுதுறையை சேர்ந்த 61 வயது முதியவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவரை திருச்சி அரசு மருத்துவ மனையில் உள்ள ஒமிக்ரான் வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய சளி மாதிரி எடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு வந்த பிறகுதான், அவர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என தெரியவரும்.

இதே போல் கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட வில்லை என தெரியவந்தது

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!