/* */

திருச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
X

திருச்சி கருமண்டபத்தில் கொள்ளை நடந்த வீடு.

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11-வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரின் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பீரோவை பார்த்ததில், அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம், சமையல் அறையில் வைத்திருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது.


இது குறித்து துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியோடு வீடு மற்றும் அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?