/* */

3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு மழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அறுவடை செய்து உலர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். மழைக்குப்பின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தங்களது நெல்லை கொண்டு சென்று விற்பனை செய்யலாம்.

மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு மழையின் தாக்கத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 5 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!