/* */

சிசிடிவி கேமராவுக்கே பாதுகாப்பில்லை : அபேஸ் செய்த வாலிபர் கைது

திருச்சி பீமா நகரில், சிசிடிவி கேமராவை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிசிடிவி கேமராவுக்கே பாதுகாப்பில்லை : அபேஸ் செய்த வாலிபர் கைது
X

திருச்சி பீமநகர் மாரியம்மன் கோயில் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 62). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே டிபன்கடை வைத்து நடத்தி வருகிறார். பரமசிவம் தனது வீட்டில் பொருத்திய 2 சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, பாலக்கரை போலீசில் பரமசிவம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல மூங்கிலடி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பரமசிவம் வீட்டில் இருந்த கேமரா திருடியதை ஒப்புக்கொண்டார். மாநகர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில், ஜனார்த்தனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 4 Dec 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!