Begin typing your search above and press return to search.
சிசிடிவி கேமராவுக்கே பாதுகாப்பில்லை : அபேஸ் செய்த வாலிபர் கைது
திருச்சி பீமா நகரில், சிசிடிவி கேமராவை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
திருச்சி பீமநகர் மாரியம்மன் கோயில் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 62). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே டிபன்கடை வைத்து நடத்தி வருகிறார். பரமசிவம் தனது வீட்டில் பொருத்திய 2 சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, பாலக்கரை போலீசில் பரமசிவம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல மூங்கிலடி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பரமசிவம் வீட்டில் இருந்த கேமரா திருடியதை ஒப்புக்கொண்டார். மாநகர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில், ஜனார்த்தனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.