/* */

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு

திருச்சியில் ஆன்லைனில் தேர்வு எழுத வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது  போலீசார் வழக்கு
X

திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் (பைல் படம்)

ஆன்-லைன் மூலம் பருவ தேர்வுகளை நடத்த வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்து மாணவர் இயக்க அமைப்பு மாநில தலைவர் முனீஸ் (வயது 26), 10 மாணவிகள் உள்பட 400 மாணவர்கள் மீது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த மாணவர்கள் திரள இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Updated On: 18 Nov 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...