/* */

திருச்சியில் போலீஸ்காரரின் மனைவிக்கு கொலை மிரட்டல்

திருச்சியில் போலீஸ்காரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் போலீஸ்காரரின் மனைவிக்கு கொலை மிரட்டல்
X

திருச்சி மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் காத்துவன் என்பவரது செல்போனை காணவில்லை. அவர் தனது செல்போனை போலீஸ்காரரின் சகோதரர்தான் திருடி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்.

சம்பவத்தன்று காத்துவன், தனது நண்பரான அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து போலீஸ்காரரின் சகோதரருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ்காரர் மனைவியின் உடையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் இ.பி.கோ.294 (பி), 323, 506 (2) மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் காத்துவன், மணிகண்டன் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 21 Jan 2022 1:49 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்