/* */

திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர் - மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

திருச்சி முக்கொம்புவுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர் - மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
X

திருச்சி  கம்பரசம்பேட்டை தடுப்பணையில்  வழிந்தோடும் காவிரி நீர்.

உழவில்லையேல் உணவில்லை என்பார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக வருடாவருடம் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக கடந்த மே 12 ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீரானது இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. முக்கொம்பு அணையில் உள்ள 47 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதையடுத்து விவசாயிகள் மலர்கள் மற்றும் நெல்மணிகளை தூவி மேட்டூரில் இருந்து வந்த தண்ணீரை வரவேற்றனர். முக்கொம்பில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தற்போது கம்பரசம்பேட்டை தடுப்பணையில் வந்து அழகாய் வழிந்தோடி செல்கிறது.

Updated On: 15 Jun 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  3. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  5. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்