/* */

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலி

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நடந்த சென்ற முதியவர் பலியானார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலி
X

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 60). இவர் நேற்று முன் தினம் இரவு பெட்டவாய்த்தலை பழங்காவேரியில் இருந்து பெட்டவாய்த்தலை கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழங்காவேரி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதத்தில் ரெங்கராஜ் மீது மோதியது.

இந்த விபத்தில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெட்டவாய்த்தலை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்