Begin typing your search above and press return to search.
மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது
மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மேனிவயல் பிரிவு சாலையில் கடந்த ஆண்டு தம்பதியினரிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை துவரங்குறிச்சி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் தம்பதியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த சாருக்கான் (வயது 22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் சாருக்கான், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.