/* */

தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட 238 பகுதிகள் :-ஆட்சியர் தகவல்

மாவட்டத்தில் கொரோனா 238 பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட 238 பகுதிகள் :-ஆட்சியர் தகவல்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 29 ஆம் தேதியான இன்று 691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46,486 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 704 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 38,394 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 7845 கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்று 7 பேர் உயிரிழப்பு, இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 238 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி ஊரகம் 12, வல்லநாடு 2, ஸ்ரீவைகுண்டம் 5, ஆழ்வார்திருநகரி 11, உடன்குடி 16, சாத்தான்குளம் 7, தூத்துக்குடி மாநகராட்சி 51, கோவில்பட்டி 64, ஓட்டப்பிடாரம் 23, கயத்தார் 21, விளாத்திகுளம் 18 என மொத்தம் 238 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Updated On: 29 May 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  3. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  5. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  7. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  8. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  9. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  10. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...