டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி  சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைப்பு செய்திடவும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில உள்ள மாநகராட்சிகளில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து 100க்கும் மேற்ப்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கைகளில் பதாகைகளை எந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.


Updated On: 1 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  2. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  3. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  4. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  5. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  7. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  8. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  9. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.,23) நீர்மட்ட நிலவரம்