Begin typing your search above and press return to search.
ஸ்டெர்லைட் விவகாரம்: அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவதூறு தகவல்களை பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாத்தில் காவல்துறைக்கு எதிராகவும், தூத்துக்குடியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாட்ஸ் அப்பில் அவதூறு தகவல்களை பரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வடபாகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் அளித்த புகாரின் பேரில், 504, 505, 505/1 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.