/* */

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில்வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் 13.42 டன் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர்  தகவல்.
X

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள், பழங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று (24.05.2021) முதல் ஒருவார காலத்திற்கு தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது.

மேற்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்களின் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் விற்பனைத்துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும்; காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறையின் மூலம் 29 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 45 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத்துறையின் மூலம் 5 வாகனங்களிலும்; ஆக மொத்தம் 79 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இல்லம் தேடி 13.42 டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று மட்டும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இச்சேவை தொடரும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.



Updated On: 24 May 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு