/* */

தூத்துக்குடியில் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த இளைஞர் கைது

தூத்துக்குடியில் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாக 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த இளைஞர் கைது
X

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்த தங்கதுரை (52) என்பவர் டெலிகிராம் ஆப் பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா என்ற விளம்பரம் Aashna (@Aashna_2mi) என்ற ID-யில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசிய போது அவர்கள் FROSCH Travel Management Company நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியன் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக அதன் சம்பந்தப்பட்ட Star Ratings கொடுப்பதன் மூலம் மேற்படி கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறி உள்ளனர்.

இதனையடுத்து முதலில் ரூ. 1100 மற்றும் ரூ. 1500 லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்து பின்பு அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை (Task) செய்யும் படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து தங்கதுரை அவர்கள் கூறிய வளைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு(Task) பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054 பணத்தை தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு தங்கதுரையிடம் பணம் மோசடி செய்த திருநெல்வேலி மானூர், குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவரை நேற்று அவரது வீட்டின் முன்பு வைத்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (எண். IV-இல்) ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

இந் வழக்கில் கைதான எலியாஸ் பிரேம் குமார் என்பவர் மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தியுள்ளதும், அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூபாய் 25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை செய்து எதிரியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: இதுபோன்று பல்வேறு Like and Review Scam சைபர் குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதனால் Like and Review Scam சம்மந்தமாக உங்களை முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு Youtube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Updated On: 25 May 2023 4:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு