/* */

திருவள்ளுவர் மன்றம் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்

HIGHLIGHTS

திருவள்ளுவர் மன்றம் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
X

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 50ம் ஆண்டு நிறைவு விழாவில்  பங்கேற்று பரிசளித்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 50ம் ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்று பரிசளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் 50ம் ஆண்டு நிறைவு விழா சௌபாக்கிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வர் சாந்தி மகேசுவரி, சீனிவாசா மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இலக்குமணப்பெருமாள், பசும்பொன் கல்வி அறக்கட்டளை பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் மன்றம் செயலர் நம்.சீனிவாசன் வரவேற்றார். பேராசிரியர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் மன்ற நிறுவனர் பேராசிரியர் சங்கரவள்ளிநாயகம் நூல்களை நாட்டுடைமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகாசி ராமச்சந்திரன் பேசினார். தொடர்ந்து முப்பால் பெரிதும் உணர்த்துவது அன்புச் சிந்தனையா, அறச்சிந்தனையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் திருவள்ளுவர் மன்ற சார்பு தலைவரும், லட்சுமி அம்மாள் பல்தொழில்நுட்ப கல்லூரி மேனாள் துறைத்தலைவருமான கருத்தப்பாண்டி, துணைத்தலைவர் திருமலை முத்துச்சாமி, இணைச் செயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாளர் அந்தோணிராசு, உறுப்பினர்கள் பொன்ராசு, கெங்கம்மாள், பரமசிவம், பிரபு, ஆறுமுகம், சங்கரசுப்பிரமணியன், இசைவாணர் சந்திரசேகர்,தமயந்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...