/* */

கோவில்பட்டியில் பள்ளி மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்

கோவில்பட்டியில் பள்ளி மாணவரை கம்பால் தாக்கியதாக ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது. தாக்கப்பட்ட மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் பள்ளி மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
X

கோவில்பட்டி அரசு மருத்துவமனை. (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள களப்பான்குளத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் கழுகுமலையில் உள்ள ஆர்.சி.சூசை மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது வகுப்பில் இருந்த சமூகவியல் ஆசிரியை ரெமிலா (49), மாணவர்களிடம் வீட்டுப்பாடம் எழுதியதற்கான நோட்டை கேட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் தங்கள் செய்த வீட்டுபாடங்களை ஆசிரியையிடம் காண்ப்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்றுள்ளனர். பிரார்த்தனை முடிந்து வந்ததும் 13 வயது மாணவரிடம் வீட்டுப்பாடம் செய்யாமல் பொய் சொல்கிறாயா? என்றுக் கூறி ஆசிரியை கம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மாணவரின் தாய் கவிதாவுக்கு, ஆசிரியை ரெமிலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, காயமடைந்த மாணவரின் தாய் கவிதா பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி , கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

காயமடைந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் தாய் கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை ரெமிலா மீது கழுகுமலை காவல்துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Updated On: 27 Nov 2023 1:55 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  3. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  4. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  5. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  6. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  7. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  9. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு