/* */

கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி அருகே  ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
X

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஹவுசிங் போர்டு காலனி, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். நெல்லை சென்றுவிட்டு கோவில்பட்டிக்கு அரசு விரைவு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

கயத்தார் அருகே பேருந்து வந்தபோது, அவரது கைப்பையை மர்ம நபர் அறுத்து பறித்துச் சென்றுவிட்டார். அந்த பையில் அவர் 20 பவுன் நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கயத்தார் காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 26 Aug 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  3. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  5. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  6. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  8. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு