/* */

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
X

தூத்துக்குடி அனல் மின்நிலையம். (கோப்பு படம்).

தூத்துக்குடி துறைமுக சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அனல் மின்நிலையத்தில் தலை 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மொத்தம் ஐந்து யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு, கொதிகலன் பழுது, கண்வேயர் பெல்ட் பழுது உள்ளிட்டவை காரணமாக அடிக்கடி இங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவது உண்டு. மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலையும், விபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது அலகு பராமரிப்பு பணிக்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஐந்தாவது அலகில் கொதிகலன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தில் முறையாக பராமரிப்பு நடைபெறாததால் சில விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்றாவது அலகில் புகை போக்கியில் கம்பி ஒன்று கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எனவே, அனல் மின்நிலைய நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி காற்று பலமாக வீசி வரும் நிலையில் அந்த புகை போக்கியில் அபாயகரமான வகையில் தொங்கிக்கொண்டு இருக்கும் கம்பியை சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 July 2023 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?