/* */

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார் நிறுவனம் வழங்கல்

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10ஆ்க்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தனியார் நிறுவனம் வழங்கியது.

HIGHLIGHTS

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார் நிறுவனம் வழங்கல்
X

திருவாரரூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிதி நிறுவனம் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கியது.

திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்காக தனியார் நிதி நிறுவனம் சார்பாக 10 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கப்பட்டது . கொரோனா தொற்று இரண்டாம் அலை தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மட்டுமன்றி பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் தொற்றால் பாதிப்போருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இன்றைய தினம் திருவாரூரில் இயங்கிவரும் நாராயணி நிதி லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தின் சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் அரசு மருத்துவமனை கல்லூரிக்குபயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலர்ள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 May 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!