/* */

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: வேளாண்துறை செயலர்

இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங்பேடி திருத்துறைப்பூண்டியில் பேட்டி.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: வேளாண்துறை செயலர்
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த வடகாடு கோவிலூர், கள்ளிக்குடி, எடையூர், சிங்கலாந்தி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேதமடைந்துள்ள பயிர்களின் நிலை குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,

தமிழக அரசின் உத்தரவின்படி சேதமடைந்துள்ள பயிர்கள் வேளாண் துறை மூலம் கணக்கிடப்பட்டு ஜனவரி 29-ஆம் தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையரிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் முழுமையாக இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் விவசாயிகளின் பக்கமே உள்ளோம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்று தருவோம் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் ஹேமா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 22 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?