/* */

தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்கள்

போலீஸ் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மூன்று பெண்கள் தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர்.

HIGHLIGHTS

தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்கள்
X

தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பெண்கள்.

சின்னமனுார் அருகே முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி, 24. இவரது கணவர் சேவுகராஜன் மனைவியை பிரிந்து செல்லும் போது குழந்தையையும் அழைத்துச் சென்று விட்டார். இந்த குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என மகாலட்சுமி சின்னமனுார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி, தனது தாய் பரிமளா தனது அக்கா பிரியதர்ஷினி ஆகியோருடன் தேனி எஸ்.பி., அலுவலகம் வந்தார். அப்போது எஸ்.பி., வேறு அவசர பணியில் இருப்பதாக கூறி சந்திக்க அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த மூன்று பெண்களும் எஸ்.பி., அலுவலகம் முன்பு உள்ள மதுரை ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்த மூன்று பேரையும் போலீசார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 May 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை