/* */

தேனி கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தேனியில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரபிரபு, 42. இவர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கஞ்சா விற்பனை செய்ததாக மகேந்திரபிரபுவை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் மீது மேலும் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தேனி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் முரளீதரன் பரிந்துரையை ஏற்று, மகேந்திரபிரபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Updated On: 24 Feb 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்