/* */

தேனி : விவசாயி மர்ம மரணம்- போலீசார் விசாரணை.

போடிநாயக்கனூரில் ரத்த காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி : விவசாயி மர்ம மரணம்-  போலீசார் விசாரணை.
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ரத்த காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர் மேலத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாகராஜ், இவர் மாங்காய் விவசாயி ஆவார். போடி அருகே உள்ள சிறைக்காடு என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் காலை தோட்டத்துக்கு சென்றவர், மாலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் தோட்டத்திற்கு தேடி சென்றனர். அப்போது ரத்த காயங்களுடன் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் குரங்கணி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

Updated On: 4 Jun 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்