Begin typing your search above and press return to search.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு : மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு
ஆண்டிபட்டியில் மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஆண்டிபட்டி நல்ல தண்ணீ்ர் கிணற்று தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி ரமீலாதேவி, 65. இவர் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள மாட்டு கொட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது டூ வீலரில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், ரமீலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் ரமீலா தேவி புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தேனி மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறு்த்தி உள்ளனர்.