/* */

உலக அருங்காட்சியங்கள் தினம்: தஞ்சை பெரிய கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பழமையான தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இடங்களை மாணவர்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

உலக அருங்காட்சியங்கள் தினம்: தஞ்சை பெரிய கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கோவில் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உலக அருங்காட்சியங்கள் தினத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கோவில் ஆய்வுத்திட்டம் தென் மண்டலத்தின் சார்பில் கோவில் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உலக அருங்காட்சியக தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, அதன்படி பழமையான தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்திய தொல்லியல் துறையின் கோவில் ஆய்வுத் திட்டம் தென் மண்டலத்தின் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் விருதுநகர் தனியார் கல்லூரி தமிழ் இலக்கிய மாணவர்கள் பங்கேற்றனர், அவர்களுக்கு தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றி எடுத்துரைத்தனர்.

விழிப்புணர்வு களபயணத்தில் கட்டக்கலை மற்றும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் கலாச்சார சின்னங்களாக திகழும் கோவில்களான தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோவில், பட்டீஸ்வரம் பஞ்சவன் மகாதேவி கோவில், கங்கைக்கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், மாளிகைமேடு அகழாய்வு களம், மலையடிப்பட்டி சிவா மற்றும் பெருமாள் குடைவரைக்கோவில், விசலூர் சிவன் கோவில், குடுமியான்மலை சிவன் கோவில், சித்தன்னவாசல் பாண்டியர் குடைவரைக்கோவில், கொடும்பாளூர் ,மூவர் கோவில் ஆகிய இடங்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Updated On: 17 May 2022 9:28 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...