/* */

தஞ்சாவூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களுக்கு சீல்: 4 பேர் கைது

தஞ்சாவூர் வடக்கு வீதி தற்காலிக பேருந்து நிலையம் சிஆர்சி டெப்போ ஆகிய பகுதிகளில் 4 மதுக்கூடங்கள் இயங்கி வந்தன

HIGHLIGHTS

தஞ்சாவூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களுக்கு சீல்: 4 பேர் கைது
X

தஞ்சாவூர் நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களை டாஸ்மாக் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டாஸ்மாக் அதிகாரிகள் தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருடன் இணைந்து திடீர் ரெய்டு நடத்தினர். இதில் தஞ்சாவூர் வடக்கு வீதி, தற்காலிக பேருந்து நிலையம், சிஆர்சி டெப்போ ஆகிய பகுதிகளில் 4 மதுக்கூடங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அம் மதுக்கூடங்களை டாஸ்மாக் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) பி.வெங்கடேஷ்வரன், உதவி மேலாளர் (கணக்கு) மகேந்திரன், இளநிலை உதவியாளர்கள் தியாகராஜன், அலுவலக உதவியாளர் கோபி ஆகியோர் இடம்பெற்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக, சாந்தகுமார் (51), அருமைராஜ் (50), கிருஷ்ணன் (54), யோகநாதன் (62) ஆகிய 4 நபர்களை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 பிராந்தி பாட்டில்கள் மற்றும் 11 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....