/* */

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

HIGHLIGHTS

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
X

திருமலைசமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி. 

தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மற்றும் கோட்டாச்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மணப்பாறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குவளை, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 16 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...