Begin typing your search above and press return to search.
ஊரடங்கு நேரத்தில் - நான்கு மணி நேரம் காத்திருப்பு
கொரோனா நிவாரண நிதி வழங்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் நான்குமணி காத்திருந்த பயனாளிகள், கொரோனா நேரத்தில் மேடை நிகழ்ச்சிகள் தேவையா என்று பொதுமக்கள் கேள்விஎழுப்பினர்.
HIGHLIGHTS
தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் முதல்கட்ட தவணை தொகை 2000 ரூபாய் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேசன் கடைகளிலும் காலை முதலே வழங்கப்பட்டு வந்த நிலையில் தஞ்சை காவேரி சிறப்பங்காடியில் உள்ள ரேஷன் கடையில் நிவாரண நிதி வாங்க வந்தவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் காலை 8 மணி முதல் 12 மணி வரை சமூக இடைவெளி இன்றி அருகருகே அமர்ந்திருந்தனர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நான்கு மணி நேரமாக ஒரே இடத்தில் அருகருகே அமர வைத்து இருந்தது பெரும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண தொகையை திமுகவினரே வழங்கினர். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.