/* */

பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

HIGHLIGHTS

பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு
X

பைல் படம்

பட்டுக்கோட்டை வட்டம் வேப்பங்காடு கிராம ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பட்டுக்கோட்டை ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.பூபேஸ்குப்தா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ப.காசிநாதன், மாவட்ட நிர்வாகிகள் சி.பக்கிரிசாமி, பா.பாலசுந்தரம், என் காளிதாஸ், கலியபெருமாள் உள்ளிட்டோர் இன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விபரம். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வேப்பங்காடு கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்த பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்கின்ற மாணவ- மாணவியர்கள் அதிகமாக சென்று வருகின்றனர்.

மேலும் பெண்கள் அன்றாட கூலி வேலைக்கு பட்டுக்கோட்டைக்கு சென்று வருகிறார்கள். இந்த இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு வருகிறது. இந்த கடையை கட்டக்கூடாது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் அதன் மீதுஎந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.புதிய கடை கட்டப்பட்டு வருவதற்கு காரணமாக வேப்பங்காடு ஆதிதிராவிடர் பகுதியில் கட்டவில்லை, ஏனாதி எல்லையில் உள்ள இடத்தில் கட்டுகிறோம் என்றுஅரசு அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வேப்பங்காடு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை திறந்தால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் .இளைஞர்கள், வேலை பார்க்கின்ற தொழிலாளர்கள் உடல் நலம் சீர் கெட்டு ஏழை, எளிய குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை திறப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 7 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!