/* */

நோய் வருமுன் காக்கும் டிரைகோடெர்மாவிரிடி : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

நோய் வருமுன் காக்கும் டிரைகோடெர்மாவிரிடி :  மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல்
X

25 விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளிக் கையேடு,கிட்பேக் மற்றும் தலா 2 .5 கிலோ டிரைக்கோடேர்மா விரிடிஎன்னும் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்து ஆகியவை  வழங்கப்பட்டது.

மதுக்கூர் வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு நடைபெற்ற உழவர் வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட கீழக்குறிச்சி மற்றும் உலயகுன்னம் சேர்ந்த 25 விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளிக் கையேடு,கிட்பேக் மற்றும் தலா 2 .5 கிலோ டிரைக்கோடேர்மா விரிடிஎன்னும் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

டி.விரிடி என்ற எதிர்உயிரி மருந்து உளுந்து கடலை எள் மற்றும் தேன்னையில் ஏற்படக்கூடிய வேர்வாடல் நோய், சாறு வடியும் நோய் ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ வினை ஐம்பது கிலோ மக்கிய எருவுடன் கலந்து வேருக்குஅருகில் இடுவதன் மூலம் நோய் வருமுன் தடுக்க முடியும்.


குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பு செய்து நிறைவான மகசூல் பெற இயலும். எனவே உழவர் வயல்வெளி பள்ளியில் கற்றுக் கொண்ட விவசாயிகள் சக விவசாயிகளுக்கும் இதன் நன்மைகளை தெரிவித்து பயன்பெற வேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியினை வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் நிறுவன தாலுகா அலுவலர் மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா , அய்யாமணி மற்றும் சிசிஅலுவலர் இளமாறன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 18 March 2024 4:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது