/* */

அரசு பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய அதிகாரி கைது: பாேலீசார் அதிரடி

அரசு பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டியதோடு, தவறான தகவல் அனுப்பிய, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கைது.

HIGHLIGHTS

அரசு பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய அதிகாரி கைது: பாேலீசார் அதிரடி
X

அரசு பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டியதோடு, அவர் குறித்து தவறான தகவல் அனுப்பிய, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி சாலையில் உள்ள தமிழ்நகரை சேர்ந்தவர் முருகானந்தவள்ளி,48,. இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அப்போது அதே அலுவலகத்தில் தஞ்சை மாரியம்மன்கோவிலை சேர்ந்த விஜயகுமார்,58, என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது விஜயகுமார் திருவோணம் யூனியனில், துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2 பேரும் ஒரே அலுவலத்தில் வேலை பார்த்து வந்ததால், அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முருகானந்தவள்ளியின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இந்த நிச்சயதார்த்தம் குறித்து விஜயகுமாரிடம் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த விஜயகுமார், கடந்த சிலநாட்களுக்கு முன்பு, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, முருகானந்தவள்ளியிடம், கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயகுமார் ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதற்கிடையில், விஜயகுமார், முருகானந்தவள்ளியின் மகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு, முருகானந்தவள்ளிக்கும் வேறு நபருக்கும் தொடர்பு இருப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இது முருகானந்தவள்ளிக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக விஜயகுமாரிடம், முருகானந்தவள்ளி கேட்ட போது, திட்டியுள்ளார். இதையடுத்து முருகானந்தவள்ளி, தஞ்சை மருத்துவகல்லுாரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.

Updated On: 18 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  3. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  5. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  6. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்