/* */

சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில் விழா

குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது.

HIGHLIGHTS

சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில்  விழா
X

குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125வது ஆண்டு விழா கொண்டாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் விமூர்த்தானந்த் மகராஜ் பங்கேற்றார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்து தாயகம் திரும்பிய பின்னர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி குடந்தைக்கு வருகை புரிந்து 3 நாட்கள் தங்கினார். நகரின் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அளித்த வரவேற்பிற்கு பதிலுரை அளிக்கும் வகையில் குடந்தை போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தின் பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். குறிப்பாக எழுமின், விழிமின், குறிசாறும் வரை நில்லாது செல்மின் என்ற அவரது சொற்றொடர்களை குடந்தையில் தான் முதன் முதலில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

சிகாகோ சென்று சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125ம் ஆண்டு வரும் ஜனவரி 26ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு அம்சமாக குடந்தையில் சுவாமி விவேகானந்தர் வருகை தந்து உரையாற்றிய போர்ட்டர் டவுன்ஹால் வளாகத்தை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பார்வையிட்டார். இதில் குடந்தை எம்.எல்.ஏ. அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் தமிழழகன், தி கும்பகோணம் கிளப் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், குடந்தை ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன், சத்யநாராயணன், பாஸ்கர், பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடந்தையில் சுவாமி விவேகானந்தர் சென்ற பள்ளிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. நகர மேல்நிலைப்பள்ளி செயலாளர் வேலப்பன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் தீபக் ரமேஷ், பாணாதுறை மேல்நிலைப்பள்ளி செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் கூறுகையில், அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத்ஸ்மரணானந்த மகராஜ், துணைத் தலைவர் கவுதமானந்த மகராஜ் வழிகாட்டலுடன் பக்தர்களின் பங்களிப்போடு குடந்தையில் சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றிய 125ம் ஆண்டை முன்னிட்டு வரும் பிப்ரவரி 3,4 மற்றும் 5ம் தேதிகளில் குடந்தையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திடவும், ஆண்டு முழுவதும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பக்தர்களுக்கான பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் நிர்வாக குழுவின் ஒத்துழைப்போடு திருவுருவச்சிலை அமைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திட எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்டோர் முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் குடந்தை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பள்ளிகளின் நிர்வாகக்குழு மூலம் சுவாமி விவேகானந்தர் வருகையை நினைவு கூறும் விதமாக பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

Updated On: 30 Nov 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?