/* */

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் சிவகிரி அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

HIGHLIGHTS

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு
X

தென்காசி அருகே நேரிட்ட விபத்தில் சிக்கிய கார் 

மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் சிவகிரி அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மதுரை செல்லூர் பகுதியிலிருந்து சுரேஷ், மன்சூர் அலிகான், பிரபு,பேச்சிமுத்து, ஜான்சன் ,வாசக மணி அருண்குமார், மகேஷ், அருண்குமார் ஆகியோர், குற்றாலத்தில் உள்ள தனியார் அருவியில் குளிப்பதற்காக நண்பர்களுடன், மதுரையிலிருந்து குற்றாலம் புறப்பட்டனர். நள்ளிரவில் கார் சிவகிரி அருகே உள்ள வளைவில், வேகமாக வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் காரை ஒட்டிவந்த மன்சூர் அலிகான், பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து, சிவகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை கொண்டதில், காரில் பயணம் செய்த அனைவரும் மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

Updated On: 4 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  2. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  3. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  7. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  8. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  9. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி