/* */

முப்புலியூரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

முப்புலியூரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

முப்புலியூரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
X

முப்புலியூர் கிராமத்தில் பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் வெள்ளச்சாமி ஆலோசனையின் படி, இன்று முப்புலியூர் கிராமத்தில் பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் காசநோய் அறிகுறிகள் கண்டவர்களுக்கு நடமாடும் அதிநவீன வாகனத்தின் மூலம் சளி பரிசோதனை மற்றும் நுண்கதிர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நலக்கல்வியாளர் மாரிமுத்துசாமி காச நோயின் அறிகுறிகள் மற்றும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.

மருத்துவர் சதிஷ்குமார் ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாட்டினை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ், முப்புலியூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமர் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 8 Sep 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!