/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றகை

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

HIGHLIGHTS

தென்காசி நகராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், தமுமுக மாவட்டச் செயலருமான முகமது சலீம் தலைமை தாங்கினார்.

10-வது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு இரண்டு மாத காலமாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்வதால் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது.

இப்பகுதியில் உடைந்த பாலத்தை சரி செய்ய வேண்டும். வடிகால் நீரோடை உடைப்பு ஏற்பட்டு தெரு பகுதிகளுக்குள் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. அதனை உடனே சரிசெய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமுமுக-வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...