தென்காசியில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
Committee Meeting - தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது
HIGHLIGHTS
Committee Meeting -தென்காசி மாவட்ட ஊராட்சி மாதாந்திர கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு நிதிகள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற உறுப்பினர்களுக்கும் அதேபோல் சம அளவில் ஒதுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் இந்த முறை என் பகுதியில் பணிகள் அதிகம் இருப்பதால் நிதிகள் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை எனக்கு ஒதுக்கப்படும் நிதியை உங்கள் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்படும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து சில உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2