பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை இன்று ஐக்கிய அரபு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தென்காசி முஸ்தபியா நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இறைவனுக்கு குர்பானி பலி கொடுக்கப்பட்டது.
இந்த சிறப்பு தொழுகையில் தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் சலீம், தற்போதைய நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்