Begin typing your search above and press return to search.
தென்காசியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய அளவில் குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் அரசு மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை (14.03.2022 முதல் 21.03.2022) முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் முன்னிலையில் 1 முதல் 19 வயது இருபாலர் குழந்தைகள் என 3,41,943 நபர்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.