Begin typing your search above and press return to search.
தென்காசியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்
HIGHLIGHTS
கேரள மாநிலத்தில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரையிலும், ஒரு சில பேருந்துகள் கொல்லம் வரையிலும் இயக்கப்படுகிறது.
தொலை தூர பேருந்துகள் இயங்காதால் மருத்துவமனைகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டிய பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.