/* */

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தென்காசியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தென்காசியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தென்காசியில் ரத்த தான முகாம்
X

தென்காசியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தென்காசியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிறுவனம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

ரத்ததானம் வழங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக நடந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ரகுமான்கான், இம்ரான்கான் முன்னிலை வகித்தனர். ஐக்கிய ஜமாத் பொருளாளர் ஐ ஷேக் மன்சூர் வரவேற்றார்.முகாமில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் பாபு தலைமையில் சுதா, பொற்செல்வி, ஹரி மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் 15க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விடிஎஸ் ஆர் சில்க்ஸ் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Updated On: 14 Jun 2022 12:53 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை