தென்காசி மாவட்டத்தில் 440 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு
தென்காசி மாவட்டத்தில் வெற்றி பெற்ற 440 வார்டு உறுப்பினருக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் வெற்றி பெற்ற 440 வார்டு உறுப்பினருக்கான பதவியேற்பு விழா முடிந்ததும், தங்கள் கவுன்சிலர்களை ஒரே வேனில் அழைத்து சென்று காப்பாற்றிக் கொண்ட திமுக மற்றும் அதிமுக.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சங்கரன்கோவில், புளியங்குடி , தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை , சுரண்டை 6 நகராட்சிகளில் 180 வார்டு உறுப்பினர்கள், அச்சன்புதூர், புதூர், உள்ளிட்ட 17 ஊராட்சிகளில் 260 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 440 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் ஆணையாளர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதைதொடர்ந்து கவுன்சிலர் தலைவர் பதவி நாளை மறுநாள் நடைபெற உள்ளதையொட்டி திமுக மற்றும் அதிமுக தலைவர் பதவிகளை தக்க வைத்து கொள்ள, தங்கள் கவுன்சிலர்களை ஒரே வேனில் அழைத்து சென்றனர்.