Begin typing your search above and press return to search.
தென்காசியில் தீ ஆப் செயலி விளக்க கூட்டம்
தென்காசியில் தீயணைப்பு துறைக்கான புதிய செயலியின் விளக்க கூட்டம் நடந்தது.
தமிழக தீயணைப்பு துறையின் சார்பில் தீ ஆப் செயலி என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் பயன்பாடுகள் குறித்த விளக்கக் கூட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தென்காசியில் நடந்தது.இதில் தென்காசி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் சுந்தர்ராஜன், ஏட்டு கணேசன், மற்றும் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம், பஜார் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விளக்கக்கூட்டம் நடத்தி துண்டுபிரசுரம் வழங்கினர்.