Begin typing your search above and press return to search.
தென்காசியில் வாஞ்சிநாதனின் பிறந்த நாள்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பிறந்த நாள் விழாவையொட்டி, தென்காசி கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து வாஞ்சிநாதனின் வாரிசு வாஞ்சி கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.