Begin typing your search above and press return to search.
ஆலங்குளம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆலங்குளம் அருகே மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு ரத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்துதல், நாடு முழுவதும் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உட்பட பொதுமக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு சிபிஜ வட்டார தலைவர் ஐயப்பன், தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு விரைவில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்தனர்.