சிவகங்கை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்
HIGHLIGHTS
மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒருவர் இறப்பு. இன்று மட்டும் 81 பேருக்கு கொரானா தொற்று என சுகாதாரத் துறையினர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது இந்நிலையில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர் கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 893 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரானா தொற்றுக்கு ஒருவர் இறப்பு என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்