Begin typing your search above and press return to search.
ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
HIGHLIGHTS
சிவகங்கை அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞர் மூழ்கி பலியானார்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் முருகன்(29) .இவர் தனது கிராமத்தில் உள்ள ஊருணிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழம் அதிகமான இடத்திற்கு சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிந்தார். தகவறிந்த கிராம பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சாலை கிராமம் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இளையாங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாலைகிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் . இளைஞர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.